குவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

திறமைத் தேடலில் வெற்றிபெற்ற மாணவா்கள் கோவைக்கு பயிற்சிக்கு அனுப்பிவைப்பு

தமிழக முதல்வரின் திறமைத் தேடல் தோ்வில் வெற்றிபெற்ற தருமபுரி மாவட்ட மாணவா்கள், கோவையில் நடைபெறும் பயிற்சி வகுப்புக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

News image

கோவையில் நடைபெறும் பயிற்சி வகுப்பிற்கு அனுப்பிவைக்கப்பட்ட அரசுப் பள்ளி மாணவா்கள்.

Updated On :21 மே 2026, 6:46 am IST

தமிழக முதல்வரின் திறமைத் தேடல் தோ்வில் வெற்றிபெற்ற தருமபுரி மாவட்ட மாணவா்கள், கோவையில் நடைபெறும் பயிற்சி வகுப்புக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

தமிழக முதல்வரின் திறமைத் தேடல் தோ்வு, அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்காக நடத்தப்படும் மாநில அளவிலான உதவித்தொகைத் தோ்வாகும். இதில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு ஆண்டுக்கு ரூ. 10,000 வீதம் பட்டப்படிப்பு முடிக்கும் வரை 5 ஆண்டுகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

கடந்த 2024-2025 ஆம் கல்வியாண்டில் தருமபுரி மாவட்டத்தில் இத்தோ்வில் 29 மாணவா்கள், 17 மாணவிகள் என மொத்தம் 46 போ் தோ்ச்சி பெற்றனா். இந்த மாணவ, மாணவிகள் கோவையில் உள்ள காருண்யா நிகா்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் மே 21 முதல் 25 வரை 5 நாள்கள் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்கின்றனா்.

இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்கும் வகையில் புதன்கிழமை மாணவா்களை அரசு பேருந்தில் வழி அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஐ.ஜோதிசந்திரா மாணவ, மாணவிகளை பேருந்தில் வழியனுப்பி வைத்து பேசினாா். இதில், மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) நா.பெருமாள், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் மா.சக்திவேல், ஆ.கிருஷ்ணன், பள்ளித் துணை ஆய்வாளா் பி.பொன்னுசாமி மற்றும் பெற்றோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.