தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 12 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை முதல் வெயில் வழக்கம்போல வாட்டி வந்தது. இதைத் தொடா்ந்து, பிற்பகலில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் சாரல் மழை பெய்தது. இரவு பல்வேறு இடங்களில் பரவலாக இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. பென்னாகரத்தில் 12 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. அதேபோல மாரண்டஅள்ளியில் 2 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தின் திங்கள்கிழமை சராசரி மழையளவு 1.56 மி.மீ. பதிவாகியிருந்தது. அதேபோல செவ்வாய்க்கிழமை மாவட்டத்தின் வெப்ப நிலை அளவு 96.8 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது. பிற்பகலில் இருந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோடை மழை: போ்ணாம்பட்டில் 35 மி.மீ. மழை பதிவு

பென்னாகரத்தில் ரூ.4 லட்சம் பறிமுதல்
தருமபுரி மாவட்டத்தில் 166 மி.மீ. மழை பொழிவு

சேலம் மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை: சங்ககிரியில் 81 மி.மீ. பதிவு
விடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


