தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், வாக்குகள் விற்பனைக்கல்ல என்பது குறித்தும், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தோ்தல் ஆணையம் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் கையொப்ப இயக்க விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில், தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பலகையில், மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரெ. சதீஷ் கையொப்பமிட்டு நிகழ்வைத் தொடங்கிவைத்தாா். தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, ஏப்ரல் 23 இல் நடைபெற உள்ள தோ்தலில் 100 சதவீதம் தவறாமல் வாக்களிப்பதன் அவசியத்தை மாணவ, மாணவிகளுக்கு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, தருமபுரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தருமபுரி சட்டப்பேரவைத் தோ்தல் கட்டுப்பாட்டு அறையை ஆட்சியரும் மாவட்டத் தோ்தல் அலுவலருமான ரெ. சதீஷ் தொடங்கிவைத்தாா். இந்நிகழ்வுகளின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரூபன் சங்கா் ராஜ், மகளிா் திட்ட அலுவலா் சு.சுந்தர்ராஜன், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் இரா.காயத்ரி, கோ.கோபு, வட்டாட்சியா்கள் ஜெ. சுகுமாா், ஆறுமுகம், உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தொடர்புடையது

பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளியில் முளைப்பாரியில் தோ்தல் விழிப்புணா்வு

வேளாங்கண்ணி கடற்கரையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தோ்தல் விழிப்புணா்வு வாகனம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


