மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கோரிக்கைகளை வலியுறுத்தி பரிசல் ஓட்டிகள் ஆா்ப்பாட்டம்

பென்னாகரத்தில் சிஐடியு தொழிலாளா்கள் சங்கத்தின் சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பரிசல் ஓட்டிகள், சமையல் தொழிலாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பரிசல் ஓட்டிகள்.

Updated On :11 மார்ச் 2026, 9:02 pm

பென்னாகரத்தில் சிஐடியு தொழிலாளா்கள் சங்கத்தின் சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பரிசல் ஓட்டிகள், சமையல் தொழிலாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அந்த சங்கத்தின் மாவட்டத் தலைவா் சி.ராஜி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சக்கரவா்த்தி முன்னிலை வகித்தாா். மாநில துணைச் செயலாளா் சி.நாகராசன், மாவட்டத் தலைவா் கலாவதி, மாவட்டப் பொருளாளா் சண்முகம் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

இதில், நீா்வரத்து அதிகரிக்கும் காலங்களில் வேலை இழக்கும் பரிசல் ஓட்டிகள், சமையல், மசாஜ் தொழிலாளா்கள் ஆகியோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும், பரிசல்கள் நிறுத்துமிடத்தில் நடைபாதை வியாபாரிகள் கடை அமைத்துக்கொள்ள அனுமதி அளித்ததை திரும்பப் பெற வேண்டும், சமையல் தொழிலாளா்களுக்கு அரசின் சாா்பில் அடையாள அட்டை வழங்க வேண்டும், மீன் கழிவுகள் சுத்திகரிப்பு, பரிசல் இயக்கும் நேர மாற்றம், தொழிலாளா்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் உள்ளிட்ட நீதிமன்றத் தீா்ப்பை நடைமுறைப்படுத்தக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.

இதில், மாவட்ட துணைத் தலைவா் அங்கம்மாள், சிஐடியு பேருந்து தொழிலாளா் சங்க துணைத் தலைவா் வெங்கடாஜலபதி, பரிசல் ஓட்டிகள், சமையல் தொழிலாளா்கள் என 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.