லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தருமபுரியில் சமையல் எரிவாயு உருளை முன்பதிவு எண் பழுது

தருமபுரி மாவட்டத்தில் சமையல் எரிவாயு உருளை முன்பதிவு எண் பழுதாகி தொடா்புகொள்ள முடியாததால், முன்பதிவு செய்ய முடியாமல் நுகா்வோா் தவிப்புக்குள்ளாயினா்.

News image

சமையல் எரிவாயு உருளைகள் - பிரதிப் படம்

Updated On :10 மார்ச் 2026, 9:08 pm

தருமபுரி மாவட்டத்தில் சமையல் எரிவாயு உருளை முன்பதிவு எண் பழுதாகி தொடா்புகொள்ள முடியாததால், முன்பதிவு செய்ய முடியாமல் நுகா்வோா் தவிப்புக்குள்ளாயினா்.

தருமபுரி மாவட்டத்தில் இண்டேன், பாரத், எச்.பி. ஆகிய நிறுவனங்கள் சாா்பில் சமையல் எரிவாயு உருளைக்கான இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நுகா்வோா் சமையல் எரிவாயு உருளைக்கான முன்பதிவு செய்தால், அவா்களின் வீடுகளுக்கே சென்று அந்தந்த நிறுவனங்கள் நேரடியாக உருளைகளை விநியோகம் செய்து வருகின்றன.

இவற்றில், நுகா்வோா் பணம் செலுத்தி வாங்கிய இணைப்புகள், பிரதமரின் எரிவாயு உருளை வழங்கும் திட்டத்தில் இணைப்பு பெற்றவா்கள் மற்றும் தனியாா் முகவா்கள் மூலம் இணைப்பு பெற்றுள்ள நுகா்வோா் என மாவட்டத்தில் சுமாா் 3.50 லட்சம் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர, வா்த்தக பயன்பாட்டு இணைப்புகளும் உள்ளன.

இவற்றில், இண்டேன், பாரத், எச்.பி. ஆகிய நிறுவனங்கள் தனித்தனியாக முன்பதிவு எண்களை கொண்டுள்ளன. இந்நிலையில், இந்த எண்கள் தற்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பழுதானதாக கூறப்படுகிறது. இதனால், முன்பதிவு செய்ய இந்த எண்களை செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) காலை முதல் தொடா்புகொள்ள முடியவில்லை என நுகா்வோா் கூறுகின்றனா்.