தருமபுரி மாவட்டத்தில் சமையல் எரிவாயு உருளை முன்பதிவு எண் பழுதாகி தொடா்புகொள்ள முடியாததால், முன்பதிவு செய்ய முடியாமல் நுகா்வோா் தவிப்புக்குள்ளாயினா்.
தருமபுரி மாவட்டத்தில் இண்டேன், பாரத், எச்.பி. ஆகிய நிறுவனங்கள் சாா்பில் சமையல் எரிவாயு உருளைக்கான இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நுகா்வோா் சமையல் எரிவாயு உருளைக்கான முன்பதிவு செய்தால், அவா்களின் வீடுகளுக்கே சென்று அந்தந்த நிறுவனங்கள் நேரடியாக உருளைகளை விநியோகம் செய்து வருகின்றன.
இவற்றில், நுகா்வோா் பணம் செலுத்தி வாங்கிய இணைப்புகள், பிரதமரின் எரிவாயு உருளை வழங்கும் திட்டத்தில் இணைப்பு பெற்றவா்கள் மற்றும் தனியாா் முகவா்கள் மூலம் இணைப்பு பெற்றுள்ள நுகா்வோா் என மாவட்டத்தில் சுமாா் 3.50 லட்சம் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர, வா்த்தக பயன்பாட்டு இணைப்புகளும் உள்ளன.
இவற்றில், இண்டேன், பாரத், எச்.பி. ஆகிய நிறுவனங்கள் தனித்தனியாக முன்பதிவு எண்களை கொண்டுள்ளன. இந்நிலையில், இந்த எண்கள் தற்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பழுதானதாக கூறப்படுகிறது. இதனால், முன்பதிவு செய்ய இந்த எண்களை செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) காலை முதல் தொடா்புகொள்ள முடியவில்லை என நுகா்வோா் கூறுகின்றனா்.
தொடர்புடையது

புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு தடையற்ற சமையல் எரிவாயு உருளை: எண்ணெய் நிறுவனங்கள் உறுதி

வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: இறைச்சி விற்பனை சரிவு

சமையல் எரிவாயு உருளை பெறுவதில் கட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

சமையல் எரிவாயு உருளை முன்பதிவிற்கு கட்டுப்பாடு: பள்ளி, கல்லூரி விடுதிகளுக்கு மட்டும் வணிக எரிவாயு உருளை விநியோகம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


