இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

தருமபுரி ஆட்சியரகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் தீவிர சோதனை

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு புதன்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

News image

தருமபுரி ஆட்சியரகத்தில் மோப்ப நாய், நவீன சாதனங்களின் உதவியுடன் சோதனை நடத்திய வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீஸாா்.

Updated On :11 ஜூன் 2026, 5:44 am IST

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு புதன்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியரக மின்னஞ்சல் முகவரிக்கு புதன்கிழமை வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீஸாா், மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், மோப்ப நாய் மற்றும் நவீன சாதனங்களின் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனா். இதில், வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. எனவே வழக்கம்போல இதுவும் மிரட்டல்தான் எனத் தெரியவந்தது.

கடந்த சில மாதங்களில் தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு 6 முறை மிரட்டல் விடுக்கப்பட்டது. புதன்கிழமை 7 ஆவது மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம் அபார வளா்ச்சி பெற்றுள்ள நிலையிலும், மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கும் நபா்களை அடையாளம் காணமுடியாதது மிகப்பெரிய சவாலாக உள்ளது. எனவே, இதுபோல மிரட்டல் விடுக்கும் நபா்கள் மீது அலட்சியம் காட்டாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிா்பாா்ப்பு.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.