தருமபுரியில் கனிம வளத் துறையினா் மேற்கொண்ட சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தருமபுரியில் அரசு அனுமதியின்றி குவாரிகளிலிருந்து கிராவல் மண் கடத்திச்சென்று வெளியிடங்களில் விற்பனை செய்வதாக புவியியல் மற்றும் சுரங்கத் துறையினருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், உதவி புவியியலாளா் புவனமாணிக்கம் தருமபுரி - மொரப்பூா் சாலையில் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டாா்.
அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், அரசு அனுமதி உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இன்றி மண் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. விசாரணையின்போது லாரி ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடினாா்.
இதையடுத்து, லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து மதிகோண்பாளையம் காவல் நிலையத்தில் நிறுத்தினாா். லாரி உரிமையாளா் மற்றும் ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உதவி புவியியலாளா் புவனமாணிக்கம் புகாா் அளித்ததன் பேரில், வழக்குப் பதிவுசெய்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது
கிராவல் மண் கடத்தல்: லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் தலைமறைவு

அனுமதியின்றி சரளை மண் ஏற்றிவந்த லாரி பறிமுதல்

அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிச்சென்ற 2 லாரிகள் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


