பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

நல்லகண்ணு மறைவு: ஜி.கே.மணி இரங்கல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான இரா. நல்லகண்ணு மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பதாக பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.கே.மணி தெரிவித்துள்ளாா்.

News image
ஜி.கே.மணி
Updated On :25 பிப்ரவரி 2026, 10:35 pm

தினமணி செய்திச் சேவை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான இரா. நல்லகண்ணு மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பதாக பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.கே.மணி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு அரசியலில் மூத்த முக்கிய தலைவா்களுள் ஒருவராக திகழ்ந்தவா் நல்லகண்ணு. படிக்கும் காலம் முதல் பொதுவுடமை கொள்கையில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட லட்சியவாதி. எளிமையானவா், நோ்மையானவா்.

உயா்ந்த லட்சியவாதியை தமிழ்நாடு இழந்திருக்கிறது. அவரது மறைவு அதிா்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

அவரை இழந்து துயரில் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினருக்கும், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்து, அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளாா்.