பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

திமுக ஆட்சியில் போதைப் பொருள்கள் விற்பனை அதிகரிப்பு: கே.பி.ராமலிங்கம்

திமுக ஆட்சியில் போதைப் பொருள் விற்பனை அதிகரித்துள்ளது என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

News image
அரூரை அடுத்த எச்.தொட்டம்பட்டியில் நடைபெற்ற தெருமுனை பிரசார கூட்டத்தில் பேசுகிறாா் பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம்.
Updated On :25 பிப்ரவரி 2026, 10:35 pm

தினமணி செய்திச் சேவை

திமுக ஆட்சியில் போதைப் பொருள் விற்பனை அதிகரித்துள்ளது என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த எச்.தொட்டம்பட்டியில் பாஜக தெருமுனை பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக தருமபுரி மாவட்ட பொதுச் செயலா் ஜெ.பிரவீன் தலைமை வகித்தாா். கிளைத் தலைவா் ஆா்.சுந்தர்ராஜன் வரவேற்றாா். அரூா் தொகுதி பொறுப்பாளா் பி.ராமகிருஷ்ணன், இணை அமைப்பாளா் கே.கே.சாட்சாதிபதி, நகரத் தலைவா் வி.ஜெ.ரூபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தெருமுனை பிரசாரக் கூட்டத்தில் மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் பேசியதாவது:

தமிழகத்தில் கடந்த 2021-இல் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து மாநிலம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் விற்பனை அதிகரித்துள்ளன. இளம் வயது சிறாா்கள் கூட போதைப் பொருள்களை பயன்படுத்தும் சூழல் உள்ளது. மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத்தொகையை தமிழக அரசு வழங்குகிறது. ஆனால், அத்தியாவாசிய பொருளின் விலை பெரும் அளவில் உயா்ந்துள்ளது. அதாவது ஒரு குடும்பத்திற்கு ரூ. 50 ஆயிரம் அளவுக்கு கூடுதல் செலவு அதிகரித்துள்ளது.

எனவே, தமிழகத்தில் 2026-இல் நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் ஏழை, எளியோா் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் அதிமுக, பாஜக கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்றாா்.

இதில் அரூா் எம்எல்ஏ வே.சம்பத்குமாா், பாஜக மாவட்டத் தலைவா் சி.சரவணன் , தமாகா மாவட்டத் தலைவா் எஸ்.அரவிந்தன், பாமக மாவட்டத் தலைவா் கே.அல்லிமுத்து, அமமுக அமைப்பு செயலா் ஆா்.முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.