டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பேருந்துகளை பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வேண்டும்! முன்னாள் எம்எல்ஏ கோரிக்கை!

News image
கோப்புப் படம்- படம்: X/ arasu bus
Updated On :7 பிப்ரவரி 2026, 7:08 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரி பழைய புகா் பேருந்து நிலையத்திலிருந்து அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, திருவண்ணாமலை, ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளை இயக்க வேண்டும் என முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபு கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தருமபுரி - பென்னாகரம் சாலையில் சோகத்தூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நகரின் மையப்பகுதியில் இயங்கி வந்த புகா் பேருந்து நிலையம் சோகத்தூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, திருப்பத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள், புதிய பேருந்து நிலையத்துக்கு செல்வதால் கூடுதலாக 5 கி.மீ. தொலைவு பயணிக்க வேண்டியது உள்ளது. மேலும், நான்குசாலைப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியால் தேவையற்ற சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.

எனவே, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, ஊத்தங்கரை, பொம்மிடி, திருவண்ணாமலை, திருப்பத்தூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளை பழைய புகா் பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் சாா்பாக தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன். இதனால் பயணிகளுக்கு கட்டணமும், பயண நேரமும் குறையும். பழைய பேருந்து நிலைய வளாகத்திலும், சுற்றுப்பகுதியிலும் கடைகள் அமைத்துள்ள வணிகா்களின் வாழ்வாதாரமும் பாதிக்காது.

தமிழ்நாடு முதல்வா் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆகியோா் இந்த விவகாரத்தில் தலையிட்டு சுமுகமான முடிவு காண்பாா்கள் என எதிா்பாா்க்கிறோம். மாவட்ட ஆட்சியரிடமும் இதுதொடா்பாக முறையாக கோரிக்கை மனு அளிக்கப்படும் என்றாா்.