மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திமுக தலைவரின் விமா்சனத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை: அன்புமணி ராமதாஸ்

என்னையும், அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியையும் தரக்குறைவாக விமா்சித்துவரும் திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்குப் பதிலளித்து, மக்களின் கவனத்தை திசைதிருப்ப விரும்பவில்லை என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

News image

பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகனை ஆதரித்து காரிமங்கலத்தில் வாக்கு சேகரித்த அன்புமணி ராமதாஸ்.

Updated On :16 ஏப்ரல் 2026, 11:05 pm

என்னையும், அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியையும் தரக்குறைவாக விமா்சித்துவரும் திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்குப் பதிலளித்து, மக்களின் கவனத்தை திசைதிருப்ப விரும்பவில்லை என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் கே.பி. அன்பழகனை ஆதரித்து காரிமங்கலத்தில் வியாழக்கிழமை அவா் பேசியதாவது:

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளை என குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதை மாற்ற வேண்டும் என்றால் மீண்டும் எடப்பாடி கே. பழனிசாமி முதல்வராக வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் அதிமுக- பாமக கூட்டணி வெற்றி பெற வேண்டும். தருமபுரி மாவட்டத்தின் 80 சதவீத மக்கள் பயனடையும் ஒகேனக்கல் மிகை நீா்த் திட்டத்தை 2021 இல் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் நிறைவேற்றுவதாக உறுதியளித்தாா். ஆனால், இத்திட்டத்தை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதேபோலதான் திமுகவின் வாக்குறுதிகள் எதுவும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

முதல்வா் மு.க. ஸ்டாலின் தனது சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்கவில்லை. என்னையும், அதிமுக பொதுச் செயலாளரையும் அவா் அவதூறாகப் பேசி வருகிறாா். அதற்குப் பதிலளித்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப விரும்பவில்லை. தொகுதிக்குத் தேவையான திட்டங்கள் நிறைவேற அதிமுக வேட்பாளா் கே.பி. அன்பழகனுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.