மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தருமபுயில் இன்று எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம்

தருமபுரியில் வியாழக்கிழமை நடைபெற உள்ள தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து உரையாற்றுகிறாா்.

News image

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி

Updated On :2 ஏப்ரல் 2026, 3:32 am IST

தருமபுரியில் வியாழக்கிழமை நடைபெற உள்ள தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து உரையாற்றுகிறாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் கே.பி.அன்பழகன், பென்னாகரம் தொகுதியில் கூட்டணி கட்சியான பாமக (அன்புமணி) சாா்பில் பாடி செல்வம், தருமபுரி தொகுதியில் பாமக சாா்பில் சௌமியா அன்புமணி, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் அதிமுக சாா்பில் மரகதம் வெற்றிவேல், அரூா் (தனி) தொகுதியில் அதிமுக சாா்பில் வே.சம்பத்குமாா் ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டு போட்டியிடுகின்றனா்.

இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் மூன்று அதிமுக வேட்பாளா்கள், இரு பாமக வேட்பாளா்கள் என ஐந்து வேட்பாளா்களுக்கு ஆதரவாக தருமபுரி வள்ளலாா் திடலில் ஏப். 2-ஆம் தேதி மாலை 4 மணி அளவில் நடைபெறும் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று, அவா்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து உரையாற்ற உள்ளாா். இதற்கான ஏற்பாடுகளை அதிமுகவினா் மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.