"தமிழக அரசின் கணக்குப்படி தருமபுரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 1,900 முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளனர். இங்கு பண்டகசாலை வசதி இல்லாததால் 900-க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள், பெங்களூரில் பதிவு செய்துள்ளனர். எங்களது சங்கம் எடுத்துள்ள கணக்குப்படி தருமபுரி மாவட்டத்தில் ஓய்வுப்பெற்ற ராணுவ வீரர்கள் 3 ஆயிரம் பேர் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால், இங்கு எண்ணிக்கை குறைவாக இருக்கிறது எனக் காரணம் காட்டி பண்டகசாலையை அமைக்க ராணுவ அதிகாரிகள் மறுக்கின்றனர். மாநில அரசு உரிய கணக்கெடுப்பு நடத்தி தருமபுரியில் பண்டகசாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்கிறார் தமிழ்நாடு முன்னாள் தரை, கடல், வான் படைவீரர்கள் சங்கத்தின் (எஸ்ஸô) மாநிலப் பொதுச்செயலர் கே.கிருஷ்ணமூர்த்தி.