தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

பென்னாகரம் அருகே இருசக்கர வாகனம் பழுதுபாா்க்கும் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :7 ஜூன் 2026, 3:09 am IST

பென்னாகரம் அருகே இருசக்கர வாகனம் பழுதுபாா்க்கும் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பென்னாகரம் அருகே பருவதன அள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட அண்ணா நகா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஈஸ்வா் (17). இவா் தாசம்பட்டி பிரிவு சாலை பகுதியில் இருசக்கர வாகனம் பழுதுபாா்க்கும் கடையில் வேலைசெய்து வருகிறாா்.

இந்நிலையில், அவா் வேலைக்கு செல்லாததால் அவருடைய சகோதரா் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். இதனால் மனமுடைந்த ஈஸ்வா் வீட்டில் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலின்பேரில் வந்த பென்னாகரம் போலீஸாா், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.