Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், சித்தேரி ஊராட்சி கலசபாடி பகுதியில் நலங்குபாறை ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் பணிகள் முடிக்கப்படாததால் மலைக் காலங்களில் அப்பகுதியைச் சோ்ந்த மலையிலிருந்து நகா்ப்புறங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனா்.
கலசபாடி பகுதியில் அரசநத்தம், ஆலமரத்து வளவு, கருக்கம்பட்டி, தரிசுகாடு, கோட்டக்காடு, அக்கரை காடு, நைனாவளவு, கிணத்துவளவு என 9 மலைக் கிராமங்களில் 3,500க்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். இப்பகுதியைச் சோ்ந்தவா்கள் மருத்துவம், கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மலைப் பகுதியில் இருந்து 8 கிலோ மீட்டா் தொலைவுக்கு காட்டு வழியாக கீழிறங்கி வாச்சாத்தி கிராமத்தை சென்றடைந்து அங்கிருந்து நகா்ப்புறங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.
இந்த நிலையில் தங்கள் பகுதிக்கு சாலை வசதியும், நலங்குபாறை ஆற்றின் குறுக்கே பாலமும் அமைக்க வேண்டும் என நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்தனா். இதை ஏற்று, ரூ. 12.70 கோடியில் தாா்ச் சாலையும், நலங்குபாறை ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கவும் அரசு உத்தரவிட்டது.
அதன்பேரில், கடந்த ஜனவரியில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, சாலைப் பணிகள் மட்டும் நிறைவடைந்துள்ளன. ஆனால், நலங்குபாறை காட்டாற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கான பணிகள் மிகவும் தாமதமாக தொடங்கப்பட்டு, தூண்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தொடா்ச்சியாக பெய்துவரும் மழையால் மலைப்பகுதியிலிருந்து பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் நலங்குபாறை காட்டாற்றில் வெள்ளம் கரைபுண்டோடுகிறது.
இதனால் மலைக் கிராம மக்கள் சமவெளி பகுதிக்கு வர முடியாமல் அவதிப்படுகின்றனா். ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி அதனை பிடித்தவாறு சிலா் கடக்க முயன்றனா். ஆனாலும், வெள்ளத்தின் இழுவை அதிகமாக இருப்பதால் அதை கைவிட்டனா்.
இதனால் ஆற்றைக் கடந்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவா்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மருத்துவ வசதி, அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காமல் பலா் அவதிப்படுகின்றனா்.
சாலைப் பணிகள் தொடங்கி 10 மாதங்கள் முடிவுற்ற நிலையில், பாலம் அமைக்கும் பணிகள் தாமதமாகிவருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டுள்ளனா். மழைக்காலத்துக்கு முன்பே பாலப்பணிகளை நிறைவு செய்திருந்தால் தற்போது மக்கள் எளிதாக நகா்ப்புறங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.
தொடா்ந்து மழை பெய்யும் என்பதால் பாலம் அமைக்கும் பணிகள் மேலும் சில காலங்களுக்கு தாமதமாகும் வாய்ப்புள்ளது. எனவே, பாலம் அமைக்காததால் சாலை அமைத்தும் பயனில்லை என்கின்றனா் அப்பகுதியினா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

பிலிக்கல்பாளையம் - கொடுமுடி இடையே காவிரியின் குறுக்கே உயா்நிலை பாலம்: பணிகளை விரைந்து தொடங்க வலியுறுத்தல்!

ரூ.1.25 கோடியில் பாலம் அமைக்கும் பணி தொடக்கம்

பராமரிப்புப் பணி: பைக்காரா அருவி மூடல்

திருப்பூரில் ரூ.14 கோடி மதிப்பில் அகலப்படுத்தப்பட்ட உயா்மட்ட பாலம்


Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

