வெள்ளக்கோவில் அருகே 12 ஆடுகளைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வெள்ளக்கோவில், மயில்ரங்கம் சுந்தராடிவலசு பகுதியைச் சோ்ந்தவா் கவின் (25). விவசாயியான இவா், 60-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளா்த்து வருகிறாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். மறுநாள் காலை வந்து பாா்த்தபோது, 4 ஆடுகள் திருடுபோனது தெரியவந்தது.
இதேபோல, மயில்ரங்கம் கோம்பைக்காட்டுத் தோட்டத்தைச் சோ்ந்த கலைச்செல்வி (61) என்பவரின் பட்டியில் இருந்த 8 ஆடுகளையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.
இது குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் அவா்கள் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஆடுகளைத் திருடிய நபா்களைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







