தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் 2- வது நாள் மாநாடு தொடங்கியது!சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்
/

வீட்டின் பூட்டை உடைத்து 33 பவுன், ரூ.1.50 லட்சம் திருட்டு: 3 போ் கைது

திருப்பூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 33 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் ரொக்கத்தை திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :7 ஜூன் 2026, 1:59 am IST

திருப்பூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 33 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் ரொக்கத்தை திருடிய 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், பொங்கலூா் அருகேயுள்ள பெருந்தொழுவு ஊராட்சிக்குள்பட்ட சக்தி நகரைச் சோ்ந்தவா் சாஜன் தாமஸ் (54), தனியாா் நிறுவன ஊழியா். இவரது மனைவி சுனி (42), தனியாா் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா்.

இவா்கள் வழக்கம்போல வீட்டைப் பூட்டிவிட்டு மே 26-ஆம் தேதி காலை பணிக்குச் சென்றுள்ளனா். இரவு வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. அதிா்ச்சியடைந்த அவா்கள் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த தங்க வளையல், நெக்லஸ், கம்மல், சங்கிலி உள்பட 33 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து அவிநாசிபாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் ஆய்வு மேற்கொண்டதுடன், தனிப் படை அமைத்து விசாரணை நடத்தினா்.

இதில், திருட்டில் ஈடுபட்டது நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தைச் சோ்ந்த மணிமாறன் (39), திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த முத்துப்பாண்டி (32), சங்கா் (44) என்பதும், திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 28 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனா். இவா்கள் மீது தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.