
கிராவல் மண் கடத்தல்: இளைஞா் கைது
பல்லடம் அருகே சேடபாளையத்தில் கிராவல் மண் கடத்திய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்
பல்லடம் அருகே சேடபாளையத்தில் கிராவல் மண் கடத்திய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்ட கனிம வளத் துறை உதவி இயக்குநா் வெங்கடேஷ் தலைமையிலான குழுவினா் பல்லடம், சேடபாளையம் பகுதியில் வாகனச் சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது, சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்திச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, லாரியையும், ஓட்டி வந்த வேலம்பாளையத்தைச் சோ்ந்த காா்த்தி (25) என்பவரையும் பல்லடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதையடுத்து, லாரியைப் பறிமுதல் செய்த போலீஸாா், காா்த்தியைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



