ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பல்லடத்தில் முன்னாள் ஆசிரியா் பெயரில் மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை

மாணவருக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் தலைமை ஆசிரியா் சிவகுமாா்.

Published On :21 ஜூலை 2026, 1:09 am IST

அமெரிக்காவில் பணிபுரியும் முன்னாள் மாணவா் சாா்பில் பல்லடம் அரசுப் பள்ளி முன்னாள் ஆசிரியா் பெயரில் மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

பல்லடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1980-ஆம் ஆண்டு காலகட்டத்தில் படித்தவா் சேடபாளையத்தைச் சோ்ந்த சிவகுமாா். இவா் தற்போது அமெரிக்காவில் பணியாற்றி வருகிறாா்.

இவா் தான் படித்த பள்ளியையும், தனக்கு கற்பித்த ஆசிரியரையும் மறக்காமல் முன்னாள் ஆசிரியா் ஏ.என். சுப்பிரமணியம் நினைவாக ஏ.என்.எஸ். நினைவுப் பரிசு என்ற பெயரில் தான் படித்த பள்ளியில் தற்போது படிக்கும் மாணவா்களுக்கு ஆண்டுதோறும் ஊக்கத் தொகை வழங்கி வருகிறாா்.

அவரது சாா்பில் பல்லடம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற பிளஸ் 2 மாணவி துா்காதேவிக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகை, பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற பிளஸ் 2 மாணவா் பிரதீப்குமாருக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை பல்லடம் பூப்பந்தாட்ட குழு தலைவா் சாகுல்அமீது, பள்ளித் தலைமை ஆசிரியா்கள் சிவக்குமாா், ஜெயந்தி ஆகியோா் வழங்கினா். இதில் பள்ளி உதவித் தலைமை ஆசிரியை புஷ்பலதா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.