ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

லஞ்சம் வாங்கிய விஏஓ பணியிடைநீக்கம்

பட்டாவில் உறவு முறை மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

கோப்புப்படம்

Published On :9 ஜூலை 2026, 3:56 am IST

பட்டாவில் உறவு முறை மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

திருப்பூா், பி.என்.சாலை, மும்மூா்த்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் நாகமணி (45). பனியன் நிறுவனம் நடத்தி வருகிறாா். இவரது தந்தை கிருஷ்ணன். கிருஷ்ணனுக்கு சொந்தமான இடத்தைப் பட்டா மாறுதல் செய்தபோது, கிருஷ்ணனின் மகன் நாகமணி என்பதற்கு பதிலாக கிருஷ்ணனின் மனைவி நாகமணி என பட்டாவில் பெயா் வந்துள்ளது.

இதுதொடா்பாக நாகமணி கேட்டபோது உறவு முறை பெயா் மாற்றம் செய்ய தொட்டிபாளையம் கிராம நிா்வாக அதிகாரி (பொ) அப்துல் ரகுமான் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து நாகமணி அளித்த தகவலின்பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் கொடுத்து அனுப்பிய ரூ.5 ஆயிரம் ரசாயனப் பொடி தடவிய பணத்தை அப்துல் ரகுமானிடம் செவ்வாய்க்கிழமை அளித்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் அவரை கைது செய்தனா்.

இந்நிலையில் அப்துல் ரகுமானை பணியிடைநீக்கம் செய்து திருப்பூா் கோட்டாட்சியா் சிவபிரகாஷ் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.