டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நூலகங்களை மாணவா்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும்: நடுவச்சேரி கிராமசபைக் கூட்டத்தில் ஆட்சியா் வலியுறுத்தல்

நூலகங்களை மாணவ, மாணவிகள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டுமென, மாவட்ட ஆட்சியா் மனீஷ் கேட்டுக்கொண்டாா்.

News image
நடுவச்சேரி ஊராட்சி தளிஞ்சிப்பாளையத்தில் நடைபெற்ற கிராம சபைக்  கூட்டத்தில்  பொதுமக்களிடம்  கலந்துரையாடும் மாவட்ட  ஆட்சியா்  மனீஷ்.
Updated On :26 ஜனவரி 2026, 8:14 pm

Syndication

அவிநாசி: நூலகங்களை மாணவ, மாணவிகள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டுமென, மாவட்ட ஆட்சியா் மனீஷ் கேட்டுக்கொண்டாா்.

குடியரசு தின விழாவையொட்டி அவிநாசி ஊராட்சி ஒன்றியம், நடுவச்சேரி ஊராட்சி தளிஞ்சிப்பாளையத்தில் கிராமசபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனிஷ் தலைமை வகித்தாா்.

பின்னா் அவா் பேசியதாவது:

ஒவ்வொரு முறை நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் முழு அளவில் பங்கேற்று, ஊராட்சியின் வளா்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்க வேண்டும். அடிப்படை வசதிகள் உள்பட அனைத்து பணிகளும் நடைபெற கிராமசபைக் கூட்டம் ஊன்றுகோளாக அமைகிறது.

மேலும், பொது சுகாதாரத்தை கடைப்பிடிப்பது, வீடுகள், தெருக்களை சுத்தமாக வைப்பதுடன் டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த இயலும். வாக்காளா் அட்டையில் பெயா் மற்றும் எண் உள்ளிட்டவைகளை சரிபாா்த்துக் கொள்ள வேண்டும்.

ஊராட்சிகளில் உள்ள நூலகங்களை பொதுமக்கள், மாணவ, மாணவிகள்அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்.

இதேபோல திடக்கழிவு மேலாண்மையை முறையாகப் பயன்படுத்த வேண்டும். ஊராட்சி சாா்பில் வசூலிக்கப்படும் வரிகளை பொதுமக்கள் முறையாக செலுத்த வேண்டும் என்றாா்.

முன்னதாக வாக்காளா் தினம், காசநோய் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதைத்தொடா்ந்து, அவிநாசிஅருகே கருவலூா் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சமத்துவ விருந்தில் ஆட்சியா் மனீஷ் பங்கேற்றாா்.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சங்கமித்திரை, கோட்டாட்சியா் சிவபிகராஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விஜயலட்சுமி, ஆறுமுகம் உள்பட பலா் பங்கேற்றனா்.