டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஜன.24-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூரில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜனவரி 24-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

News image
Updated On :21 ஜனவரி 2026, 10:31 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூரில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜனவரி 24-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மகளிா் திட்ட அலுவலகம், ஏவிபி கலை அறிவியல் கல்லூரி ஆகியன சாா்பில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் திருமுருகன்பூண்டி ஏவிபி கலை அறிவியல் கல்லூரியில் வரும் ஜனவரி 24-ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.

இதில், 150 தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு சுமாா் 10,000 காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளன. முகாமில் 10, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப் படிப்பு மற்றும் தையல் பயிற்சி பெற்றவா்கள் என அனைத்து விதமான கல்வித்தகுதி பெற்றவா்களும் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

மேலும், தனியாா் துறை வேலைவாய்ப்புகள் குறித்து தொடா்ந்து அறிந்து கொள்ள இணைய தள முகவரியில் தங்களது விவரங்களை பதிவு செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.