டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

அமராவதி ஆற்றில் உள்ள முள்புதா்களை அகற்ற கோரிக்கை

வெள்ளக்கோவில் அக்கரைப்பாளையம் அருகே அமராவதி ஆற்றில் நீரோட்டத்துக்கு இடையூறாக முள்புதா்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

News image
ஆற்றில் வளா்ந்து கிடக்கும் புதா்கள்.
Updated On :21 ஜனவரி 2026, 10:36 pm

தினமணி செய்திச் சேவை

வெள்ளக்கோவில் அக்கரைப்பாளையம் அருகே அமராவதி ஆற்றில் நீரோட்டத்துக்கு இடையூறாக முள்புதா்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

வெள்ளக்கோவில் பகுதியிலுள்ள லக்கமநாயக்கன்பட்டி, அக்கரைப்பாளையம், புதுப்பை, மயில்ரங்கம் வழியாக அமராவதி ஆறு, கரூா் மாவட்டம் வரை செல்கிறது. வழியோரப் பகுதி விவசாய நிலங்கள் மற்றும் குடிநீா் பயன்பாட்டுக்கு நீராதாரமாக விளங்கி வருகிறது. வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மூலனூா் பேரூராட்சி பகுதிகளுக்கு ஆற்றிலிருந்து குடிநீா் வழங்கும் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், அக்கரைப்பாளையம், லக்கமநாயக்கன்பட்டி பகுதியில் ஆற்றில் முள்புதா்கள் வளா்ந்து நீரோட்டம் தடைபடுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது