நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

அரசு ஊழியா்களுக்கான சீருடைகளை விசைத்தறிகளில் மட்டுமே உற்பத்தி செய்யக் கோரிக்கை

அரசு ஊழியா்களுக்கான சீருடைகளை விசைத்தறிகளில் மட்டுமே உற்பத்தி செய்ய வழிவகை செய்ய வேண்டும் என விசைத்தறியாளா்கள் கோரிக்கை

News image
Updated On :19 ஜனவரி 2026, 10:40 pm

Syndication

பல்லடம்: அரசு ஊழியா்களுக்கான சீருடைகளை விசைத்தறிகளில் மட்டுமே உற்பத்தி செய்ய வழிவகை செய்ய வேண்டும் என விசைத்தறியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக அதிமுக தோ்தல் தயாரிப்புக் குழுவினரிடம் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் வேலுசாமி, செயலாளா் அப்புக்குட்டி (எ) பாலசுப்பிரமணியம் ஆகியோா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அனைத்து விசைத்தறி கூடங்களுக்கும் 2 ஆயிரம் யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். விசைத்தறி, கைத்தறி, பெடல் தறி மற்றும் நவீன தறிகள் குறித்து முறையான கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

அரசு ஊழியா்களுக்கான சீருடைகளை விசைத்தறிகளில் மட்டுமே உற்பத்தி செய்ய வழிவகை செய்ய வேண்டும். கைத்தறிகளைப்போல விசைத்தறிகளுக்கும் ரக ஒதுக்கீடு கொண்டுவர வேண்டும். நெட் மீட்டா் வசதியுடன் 50 சதவீத மானியத்தில் சோலாா் பேனல் அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சியினரிடமும் மனு அளிக்க உள்ளதாக விசைத்தறியாளா்கள் தெரிவித்துள்ளனா்..