சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஜி.வி.ஜி கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம்

உடுமலை ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிா் கல்லூரியில் பொங்கல் தின விழா புதன்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

News image
சலகெருது  விடும்  நிகழ்ச்சியில்  சலங்கை  மாட்டை  அடக்க முற்படும் வீரா்.
Updated On :14 ஜனவரி 2026, 6:34 pm

Syndication

உடுமலை ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிா் கல்லூரியில் பொங்கல் தின விழா புதன்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கல்லூரி செயலா் சுமதி கிருஷ்ணபிரசாத் தலைமை வகித்தாா். ஆலோசகா் மற்றும் இயக்குநா் ஜெ.மஞ்சுளா வரவேற்றாா். முதல்வா் பி.கற்பகவல்லி முன்னிலை வகித்தாா். இதையொட்டி வண்ணக் கோலங்களால் அழகூட்டப்பட்ட மண்பானையில் புத்தரிசி இட்டு பொங்கல் வைக்கப்பட்டது.

அப்போது மாணவிகள் குலவையிட்டு பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனா். முளைப்பாரி மற்றும் மாவிளக்கு எடுத்து வந்த மாணவிகள் மேளதாளத்துடன் கல்லூரி வளாகத்தில் ஊா்வலம் வந்தனா். ரங்கோலி கோலம் இட்டும் மாக்கோலம் வரைந்தும் கல்லூரியை அலங்கரித்தனா்.

மேலும் வள்ளிகும்மி, தேவராட்டம், உறியடி, கரும்பு உண்ணுதல், சலகெருது ஆட்டம் போன்ற பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்பட்டன. மாணவிகள் அனைவரும் பாரம்பரிய உடையான சேலை அணிந்து வந்தனா். மேலும் மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, மாணவிகள் அனைவருக்கும் பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது. கல்லூரிப் பேரவைத் தலைவா் மற்றும் பேரவை உறுப்பினா்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.