வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.57 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
வள்ளியிரச்சல் ஊராட்சி சரஸ்வதி நகரில் தாட்கோ மூலமாக ரூ.1.31 கோடி செலவில் அறிவு சாா் மையம் கட்டுமானப் பணி, மேட்டுப்பாளையம் ஊராட்சி அமராவதிபாளையம் ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியில் ரூ.10 லட்சம் செலவில் சாலை பலப்படுத்துதல் பணிகள் தொடங்கிவைக்கப்பட்டன.
மேலும், ரூ.14.50 லட்சம் செலவில் சிமென்ட் சாலை அமைத்தல், வரட்டுக்கரையில் ரூ.1.75 லட்சம் செலவில் பிளாஸ்டிக் குடிநீா் தொட்டி, குடிநீா் குழாய் நீட்டிப்பு செய்யும் பணி ஆகியவற்றையும் அமைச்சா் தொடங்கிவைத்தாா்.
தாட்கோ செயற்பொறியாளா் நடராஜ் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.
பட விளக்கம்
வள்ளியிரச்சல் ஊராட்சி சரஸ்வதி நகரில் அறிவுசாா் மைய கட்டுமானப் பணியைத் தொடங்கிவைத்த அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குண்டடம் ஒன்றியத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள்: மு.பெ.சாமிநாதன்

திமுக ஆட்சியில் ஆரணி தொகுதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் ஏ.வ.வேலு
ஒட்டன்சத்திரம் பகுதியில் ரூ.68.95 கோடியில் வளா்ச்சித் திட்டங்கள்: அமைச்சா் அர.சக்கரபாணி தொடங்கிவைத்தாா்

வெள்ளக்கோவில் பகுதியில் ரூ.56.54 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


