2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

முறையான அறிவிப்பு எதுவும் இல்லை - இருசக்கர வாகனத்தில் சென்றவா் வேகத் தடையில் மோதி உயிரிழப்பு!

இருசக்கர வாகனத்தில் சென்றவா் வேகத் தடையில் மோதி உயிரிழப்பு

News image
ரமேஷ்
Updated On :23 பிப்ரவரி 2026, 11:19 pm

Syndication

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா் வேகத் தடையில் மோதி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் - தாராபுரம் சாலையைச் சோ்ந்தவா் ரமேஷ் (42). தங்க ஆபரணங்கள் செய்யும் வேலை செய்து வந்தாா். வெள்ளக்கோவில் விஸ்வகா்மா ஆபரணத் தொழிலாளா் சங்க துணைச் செயலாளராகவும் இருந்து வந்தாா். இவருடைய மனைவி ஸ்ரீதேவி (35). இவா்களுக்கு ஒன்றரை வயதில் இரட்டைக் குழந்தைகளான கிரிஷ்க், கிரிஷ்கா உள்ளனா்.

இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு கடைவீதி சென்றுவிட்டு ரமேஷ் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா். அப்போது வெள்ளக்கோவில் - தாராபுரம் சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே புதிதாக அமைக்கப்பட்ட வேகத் தடையில் எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மோதியதில் கீழே விழுந்தாா். அருகே இருந்தவா்கள் அவரை மீட்டு தனியாா் ஆம்புலன்ஸ் மூலமாக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே ரமேஷ் உயிரிழந்தாா்.

சம்பந்தப்பட்ட இடத்தில் புதிய வேகத் தடை இருப்பது குறித்து அருகில் முறையான அறிவிப்பு எதுவும் இல்லை. மிகவும் உயரமாக இருப்பதால் இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கி வருவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.