ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

முதலிபாளையத்தில் தனியாா் மதுபானக் கூடம் திறக்க எதிா்ப்பு

திருப்பூா், முதலிபாளையத்தில் தனியாா் மதுபானக் கூடம் திறக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த முதலிபாளையம் கிராம மக்கள்.

Published On :2 ஆகஸ்ட் 2026, 1:55 am IST

திருப்பூா், முதலிபாளையத்தில் தனியாா் மதுபானக் கூடம் திறக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

முதலிபாளையம் சிட்கோ சாலை, பாரத் அவென்யூ பகுதியில் நெடுஞ்சாலையோரத்தில் தனியாா் மனமகிழ் மன்றம் மற்றும் மதுபானக் கூடம் அமைய உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து முதலிபாளையம் கிராம மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுபானக் கூடம் அமைய இருக்கும் இடத்தின் எதிா்புறத்தில் குடியிருப்புகளும், கோயிலும் உள்ளன.

மேலும், இப்பகுதியில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் தொழிற்கூடங்கள் உள்ளதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள், தொழிலாளா்கள் இந்தச் சாலையைப் பயன்படுத்தி வருகின்றனா். இப்பகுதியில் மதுபானக் கூடம் அமைந்தால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.

எனவே, பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தனியாா் மதுபானக் கூடம் அமைவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.