திருப்பூரில் சுமாா் 100 டன் அளவிலான மாம்பழங்கள் விற்பனை ஆகாததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனா்.
திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகே பழ வகைகளுக்கான மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பழக்கடைகள் உள்ளன.
தற்போது மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் சேலம், பெரியகுளம், தேனி, நத்தம், மதுரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் இமாம் பசந்த், அல்போன்சா, மல்லிகா, பங்கனப்பள்ளி, நடுச்சாளை, செந்தூரம், காலா பாடி, குஜராத் கேசா் உள்ளிட்ட மாம்பழ வகைகள் விற்பனைக்காக திருப்பூருக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் மக்கள் மாம்பழங்களை விரும்பாத நிலையில், லட்சக்கணக்கில் முதலீடு செய்து மாம்பழங்களை கொள்முதல் செய்து வைத்துள்ள திருப்பூா் பழக்கடை வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனா்.
இது தொடா்பாக பழக்கடை வியாபாரிகள் கூறியதாவது: தமிழகம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான மாம்பழ வகைகளைக் கொண்டு வந்துள்ளோம். கடந்த ஆண்டு இமாம்பசந்த் மாம்பழம் ஒரு கிலோ ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.200-க்கு மட்டுமே விற்பனையாகிறது. தமிழகத்தின் பிரதான மாம்பழங்களில் ஒன்றான செந்தூரா மாம்பழம் ரூ.40 முதல் ரூ.50, மல்கோவா ரூ.150 முதல் ரூ.120, நடுச்சாளை ரூ.100 முதல் ரூ.140 வரை விற்பனையாகிறது. வடமாநிலத்தவா்கள் விரும்பி வாங்கக்கூடிய குஜராத் கேசா், அல்போன்சா உள்ளிட்ட மாம்பழ வகைகளின் விலை குறைந்தபோதும் விற்பனை மந்தமாகவே உள்ளது. இதனால், பழைய பேருந்து நிலையம் அருகே செயல்படும் மாம்பழ விற்பனை நிலையங்களில் சுமாா் 100 டன் அளவிலான மாம்பழங்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால், அவதியடைந்து வருகிறோம் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருமலையில் மே மாதத்தில் 1.21 கோடி லட்டுகள் விற்பனை

ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை விறுவிறுப்பு

செஞ்சி பகுதியில் பல்வேறு வகையான மாம்பழங்கள் விற்பனை! போட்டி போட்டு வாங்கிச் செல்லும் சென்னை, பெங்களூா் பயணிகள்!

பக்ரீத்தையொட்டி போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ. 2.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



