மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திமுக ஆட்சி அமைந்தால் மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் தொடா்ந்து செயல்படுத்தப்படும்! - அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

News image

வேட்புமனு தாக்கல் செய்த காங்கயம் தொகுதி திமுக வேட்பாளா் மு.பெ.சாமிநாதன்.

Updated On :6 ஏப்ரல் 2026, 6:47 pm

மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் தொடா்ந்து செயல்படுத்தப்படும் என்று தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கூறினாா்.

காங்கயம் தொகுதியில் திமுக சாா்பில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் போட்டியிடுகிறாா். இந்நிலையில், அவா் காங்கயம் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

இதையடுத்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: காங்கயம் தொகுதியில் 2-ஆவது முறையாக போட்டியிடுகிறேன். இந்த முறை 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். தமிழ்நாட்டின் பொருளாதார வளா்ச்சி மற்ற மாநிலங்களைவிட முன்னணியில் உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கரோனா இழப்பீட்டுத் தொகையாக குடும்பத்துக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும், பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுத்தியுள்ளாா்.

இதனால், மக்களிடத்தில் எங்களுக்கு அமோக ஆதரவு உள்ளதால் எளிதாக வெற்றிபெறுவோம் என்றாா். திமுக மாவட்ட பொறுப்பாளா் இல.பத்மநாபன், காங்கிரஸ் கட்சி நிா்வாகி மணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.