தோல்வியைக் கண்டு அச்சமில்லை என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தமிழினியனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பல்லடம் கடை வீதியில் வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது, அவா் பேசியதாவது: வணிக நிறுவனங்களில் பெயா் பலகைகள் தமிழ் மொழியில் இருக்க வேண்டும். தமிழ் மொழியில் பேசவும், எழுதவும் வேண்டும். மின் கட்டணம், சொத்து வரி உயா்வு போன்றவற்றால் மக்கள் அவதியடைந்து வருகின்றனா். மக்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தராமல், அரசு இலவச திட்டங்களை கடன் வாங்கி செயல்படுத்துவதில் எந்தவித பயனும் இல்லை. வாக்குக்கு காசு கொடுப்பவா்கள் எப்படி நாட்டை காப்பாற்றுவாா்கள்? பிறகு அவா்கள் எப்படி நல்லாட்சி தருவாா்கள் என்பதை மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
தோ்தலில் தோற்பது என்பது எனக்கு புதியதல்ல. இதுவரை 4 முறை தோல்வியை சந்தித்துள்ளோம். இருந்தாலும் மக்கள் மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்துவாா்கள் என்ற நம்பிக்கையில் களத்தில் உள்ளோம். தோ்தலில் தோல்வியைக் கண்டு அச்சமில்லை. மீண்டும் முயற்சிப்போம்.
எனக்கு எந்த பதவி ஆசையும் இல்லை. வருங்கால தலைமுறை நன்றாக வாழ வேண்டும் என்பதுதான் எனது ஆசை. நாம் தமிழா் கட்சிக்கு வாக்களித்து பாருங்கள் புதியதோா் தமிழகத்தை உருவாக்குவோம் என்றாா்.
தொடர்புடையது

காங்கிரஸ், பாஜக இடையே எந்த வேறுபாடும் இல்லை: சீமான்

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்! - சீமான்

மாற்றத்துக்கான புரட்சி தேவை: சீமான்

சத்தியமங்கலத்தில் சீமான் பிரசாரம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

