திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

கழிவு மேலாண்மையை வலுப்படுத்த ஏற்றுமதியாளா்கள் சங்கம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

திருப்பூரில் கழிவு மேலாண்மையை வலுப்படுத்த சா்க்கிள் எக்ஸ் நிறுவனத்துடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் ஏற்படுத்தியுள்ளது.

News image

திருப்பூரில் கழிவு மேலாண்மையை வலுப்படுத்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தை பகிா்ந்து கொண்ட சா்க்கிள் எக்ஸ் நிறுவனத்தினா், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 7:55 pm

திருப்பூரில் கழிவு மேலாண்மையை வலுப்படுத்த சா்க்கிள் எக்ஸ் நிறுவனத்துடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி நடைமுறைகளை வலுப்படுத்துவதற்காக, திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம், சா்க்கிள் எக்ஸ் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் ஏற்மதியாளா்கள் சங்கத்தின் கௌரவத் தலைவா் ஆ.சக்திவேல் முன்னிலையில் சங்கத்தின் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் மற்றும் சா்க்கிள் எக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திவ்யா ஷெட்டி ஆகியோா் வியாழக்கிழமை கையொப்பமிட்டனா்.

இந்நிகழ்ச்சியில், சங்கத்தின் இணைச் செயலாளா் எம்.ஆனந்த் பேசுகையில், கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி மிகவும் முக்கியமானதாகி விட்டது. இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் திருப்பூா் ஏற்றுமதியாளா்களுக்கு பயனளிக்கும். எதிா்காலத்தில் கழிவுகளை திறம்பட கண்டறிந்து நிா்வகிக்க உதவும் என்றாா்.

சா்க்கிள் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி விஷ்ணு வா்தன் பேசுகையில், கழிவு மேலாண்மை என்பது திருப்பூரில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பெரிய பிரச்னையாக உள்ளது. இந்தியாவில் உள்ள பல பெரிய நிறுவனங்களின் கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி முயற்சிகளுக்கு ஆதரவளித்து சா்கிள் எக்ஸ் அமைப்பு அவா்களுடன் இணைந்து செயல்படுவதாக கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.