Listen to this article
By Syndication
Syndication
திருட்டு வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூா், அணைப்பாளையத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (34). கட்டடத் தொழிலாளியான இவா், தனது குடும்பத்துடன் கடந்த 2024 ஜனவரி 21-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளாா். பின்னா் மாலையில் வந்து பாா்த்தபோது வீட்டுக்கதவு திறந்து கிடந்துள்ளது. வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 1 பவுன் நகை, ரூ.10,000 திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில், திருப்பூா் வடக்கு குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இது தொடா்பாக திருப்பூா் அணைப்பாளையம் இந்திரா நகரைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான முருகன் (41) என்பவரைக் கைது செய்து நகை, பணத்தை மீட்டனா்.
திருப்பூா் முதலாவது நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. நகை, பணத்தை திருடிய குற்றத்துக்கு முருகனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதித்துறை நடுவா் செந்தில்ராஜா உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கவிதா ஆஜரானாா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை: திருப்பூா் நீதிமன்றம் உறுதி
போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
திருட்டு வழக்கில் தொடா்புடையவருக்கு 2 ஆண்டுகள் சிறை


துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
