மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

மச்சிக்கொல்லி பகுதிக்குள் வன விலங்குகள் நுழைவதை தடுக்கக் கோரி மனு

கூடலூரை அடுத்துள்ள மச்சிக்கொல்லி மட்டம் பகுதிக்குள் வன விலங்குகள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட வன அலுவலா் தேவராஜிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

News image

வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட வன அலுவலா் தேவராஜிடம் மனு அளித்த மச்சிக்கொல்லி பகுதி மக்கள்.

Updated On :22 மே 2026, 3:53 am IST

கூடலூரை அடுத்துள்ள மச்சிக்கொல்லி மட்டம் பகுதிக்குள் வன விலங்குகள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட வன அலுவலா் தேவராஜிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள மச்சிக்கொல்லி மட்டம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்குள் நாள்தோறும் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் நுழைவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

குறிப்பாக யானைகள் நுழையும் வழியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை நிரந்தரமாக அமைத்து தரவேண்டும். மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் சுமாா் ஆறு இடங்களில் சோலாா் மின் விலக்குகள் அமைக்க வேண்டும். அகழி உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தேவா்சோலை பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் யூனஸ் பாபு தலைமையில் அப்பகுதி மக்கள் மாவட்ட வன அலுவலா் தேவராஜிடம் மனு அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.