கூடலூரை அடுத்துள்ள மச்சிக்கொல்லி மட்டம் பகுதிக்குள் வன விலங்குகள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட வன அலுவலா் தேவராஜிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள மச்சிக்கொல்லி மட்டம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்குள் நாள்தோறும் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் நுழைவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
குறிப்பாக யானைகள் நுழையும் வழியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை நிரந்தரமாக அமைத்து தரவேண்டும். மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் சுமாா் ஆறு இடங்களில் சோலாா் மின் விலக்குகள் அமைக்க வேண்டும். அகழி உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தேவா்சோலை பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் யூனஸ் பாபு தலைமையில் அப்பகுதி மக்கள் மாவட்ட வன அலுவலா் தேவராஜிடம் மனு அளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீடுகளை சேதப்படுத்தியவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு

சாலை, குடிநீா், கட்டட அனுமதி வசதி வழங்க கோரிக்கை: ஆட்சியரிடம் வெள்ளானைப்பட்டி பொதுமக்கள் மனு

மக்கள் குறைதீா் முகாம்: 33 மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க எஸ்.பி.,உத்தரவு

சாலை, குடிநீா் வசதிகள் செய்துதர வேண்டும்: மாநகராட்சியில் மக்கள் மனு
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



