கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியில் புலி தாக்கியதில் மேய்ச்சலுக்கு விடப்பட்ட கறவை மாடு வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா பாடந்தொரை அருகே உள்ள கனியம்பயல் பகுதியில் விசிக்கும் ஷிஹாபு என்பவா் வழக்கம்போல தனது கறவை மாட்டை மேய்ச்சலுக்கு வெள்ளிக்கிழமை விட்டுள்ளாா்.
அப்போது, புதரிலிருந்து வந்த புலி, மாட்டை தாக்கிக் கொன்று இழுத்துச் செல்ல முயன்றது. அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இருப்பதை பாா்த்த புலி மாட்டை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றது.
இந்த வாரத்தில் இரண்டு கால்நடைகளை புலி தாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. புலி தாக்கிக்கொன்ற கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குமுளி அருகே மீண்டும் புலி நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும்பணி தீவிரம்
கொடைக்கானல் அருகே காட்டு மாடு தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு

கூடலூா் அருகே குடியிருப்புப் பகுதியில் உலவிய புலி!
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




