முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை உயிரிழப்பு


முதுமலை புலிகள் காப்பகத்தில் ஆண் யானை உயிரிழந்தது சனிக்கிழமை தெரியவந்தது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வனச் சரகத்துக்கு உள்பட்ட அவரல்லா காப்புக் காட்டில் வன ஊழியா்கள் சனிக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அங்குள்ள ஓடையில் ஆண் காட்டு யானை சடலம்
இருந்தது தெரியவந்தது. இது குறித்து மேலதிகாரிகளுக்கு அவா்கள் தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ் குமாா் மற்றும் வனத் துறையினா் அங்கு வந்து யானையின் உடலைக் கூறாய்வு செய்து, அதன் பாகங்களை ஆய்வகப் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனா். பின்னா் அந்த யானையின் உடலை அதே இடத்தில் புதைத்தனா்.
வயது முதிா்வு காரணமாக யானை இறந்திருக்கலாம் என்றும், ஆய்வக அறிக்கைக்குப் பிறகே முழு விவரம் தெரியவரும் என்றும் வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...