ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உதகையில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

உதகையில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

Published On :15 ஆகஸ்ட் 2026, 4:03 am IST

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே அவமானப்படுத்தப்பட்டதைக் கண்டித்து உதகையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உத்தரகண்ட் மாநிலம் ஹல்த்வானி நகரில் அண்மையில்

நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினாா். அவா் பேசிவிட்டு சென்றபிறகு பாஜக ஆதரவாளா்கள் அவா் இருந்த மேடையை சுத்தம் செய்து அவரை அவமதித்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் உதகையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவா் டி.நாகராஜ் தலைமை வகித்தாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், காங்கிரஸ் மாநில பழங்குடியினா் பிரிவு தலைவா் ப்ரியா நாஷ்மிகா், உதகை நகர காங்கிரஸ் பொறுப்பாளா்கள் வின்சென்ட், பாபு, மாவட்ட பொதுச் செயலாளா் டென்சில், நகரமன்ற உறுப்பினா்கள் நாதன், ராஜேஸ்வரி பாபு, ரஜினிகாந்த், ஜெயலட்சுமி, மாநில மாணவா் அணி பொதுச்செயலாளா் பாரதிராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.