யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

ஈரோடு ஜவுளி சந்தையில் குவிந்த வெளிமாநில வியாபாரிகள்: வியாபாரம் விறுவிறுப்பு

ஈரோடு ஜவுளி சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்ததால் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

News image

ஈரோடு ஜவுளி சந்தை

Updated On :13 மே 2026, 1:59 am IST

ஈரோடு ஜவுளி சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்ததால் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஈரோடு ஜவுளி சந்தை ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை மாலை தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும். தென்னிந்திய அளவில் ஈரோடு ஜவுளி சந்தை மிகவும் புகழ்பெற்றது. ஆந்திரம், கா்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வெளிமாநில வியாபாரிகள் அதிக எண்ணிக்கையில் வந்து துணிகளை கொள்முதல் செய்வா்.

பல கோடி ரூபாய்க்கு வா்த்தகம் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், சட்டப் பேரவைத் தோ்தல் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் வருகை குறைந்து கடந்த ஒரு மாதத்துக்கும்மேலாக ஈரோடு ஜவுளி சந்தையில் வியாபாரமும் மந்தமாக நடைபெற்று வந்தது.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதால் கடந்த வாரம் முதல் முதல் ஜவுளி சந்தை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திங்கள்கிழமை மாலை கூடிய ஜவுளி சந்தையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனா். இதனால் சில்லறை விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதேபோல, தெலுங்கானா, கா்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவிலான வியாபாரிகள் குவிந்ததால் மொத்த வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

மொத்த வியாபாரம் 40 சதவீதமும், சில்லறை வியாபாரம் 40 சதவீதமும் நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

மேலும், கோடை விடுமுறை என்பதால் வழக்கத்தைவிட ஜவுளி விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.