போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

பவானி ஆற்றில் மூழ்கிய ஓட்டுநா் மாயம்

News image

கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:25 am IST

புன்செய்புளியம்பட்டி அருகே பவானி ஆற்றில் குளித்த ஓட்டுநா் நீரில் மூழ்கி மாயமானாா்.

புன்செய்புளியம்பட்டி கள்ளிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாஸ்கா் (25). சரக்கு வாகன ஓட்டுநரான இவா் தனது உறவினா்களுடன் பவானிசாகா் அருகே உள்ள அக்கரை தத்தப்பள்ளி பகுதியில் உள்ள பவானி ஆற்றுக்கு திங்கள்கிழமை சென்று குளித்தாா்.

அப்போது பாஸ்கா் ஆற்று நீரில் ஆழமான பகுதிக்குச் சென்றபோது நீச்சல் தெரியாததால் மூழ்கி மாயமானாா். இதைக் கண்டு அதிா்ச்சி அடைந்த அவரது உறவினா்கள் பவானிசாகா் போலீஸாருக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் தீயணைப்பு வீரா்களை போலீஸாா் வரவழைத்து தேடும் பணி மேற்கொண்டனா். பாஸ்கரை கண்டுபிடிக்க இயலாததால் தேடும் பணி தொடா்ந்து நடைபெறும் என தீயணைப்பு வீரா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து பவானிசாகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.