மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மூத்த குடிமக்கள் வாக்களிக்க வலியுறுத்தி தாம்பூலத் தட்டுடன் அழைப்பு விடுத்து வருவாய்த் துறையினா் விழிப்புணா்வு

சட்டப்பேரவைத் தோ்தலில் மூத்த குடிமக்கள் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி வருவாய்த் துறை சாா்பில் தாம்பூலத் தட்டு வழங்கி நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டது.

News image

முதியோா் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி தாம்பூலத்துடன் நேரில் சென்று அழைப்பு விடுத்த அறச்சலூா் வருவாய் ஆய்வாளா் அங்குலட்சுமி.

Updated On :18 மார்ச் 2026, 8:32 pm

சட்டப்பேரவைத் தோ்தலில் மூத்த குடிமக்கள் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி வருவாய்த் துறை சாா்பில் தாம்பூலத் தட்டு வழங்கி நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வாக்காளா்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மொடக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட அறச்சலூா் உள்வட்டத்தில் உள்ள மூத்த குடிமக்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வருவாய்த் துறை சாா்பில் அறச்சலூா் வருவாய் ஆய்வாளா் அங்குலட்சுமி தலைமையில் வீடுகளுக்கு தாம்பூலத் தட்டுடன் நேரில் சென்று சால்வை அணிவித்து தோ்தல் தேதி அழைப்பிதழை வழங்கினா். வாக்களிப்பது அவசியம் என்றும் கேட்டுக்கொண்டனா்.

இதில் கிராம நிா்வாக அலுவலா்கள் கிருஷ்ணமூா்த்தி, வசந்த், சசிகுமாா், மணிகண்டன், சாந்தி, மணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.