ஈரோடு மண்டல அரசுப் பேருந்துகளில் 52.20 கோடி முறை மகளிா் இலவசப் பயணம் மேற்கொண்டுள்ளனா்.
அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் ஈரோடு மண்டலத்தில் ஈரோடு 1, 2, 3 பவானி, பெருந்துறை, கரூா், கொடுமுடி, கவுந்தப்பாடி, கோபி, நம்பியூா், அந்தியூா், சத்தியமங்கலம், தாளவாடி என 13 பணிமனைகள் உள்ளன. இவற்றில் 304 அரசு நகரப் பேருந்து, 421 தொலைதூர பேருந்து என 725 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பெண்கள் மட்டும் இலவசமாக பயணிக்கும் வகையில் விடியல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இவற்றில் பயணித்த பெண்கள் விவரம் குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
இலவச பேருந்துப் பயணத்தை நகரப் பேருந்துகளில் கடந்த 2021 மே 8-ஆம் தேதி அரசு அறிவித்து தொடங்கியது. ஈரோடு மண்டலத்தில் 304 நகரப் பேருந்துகளில் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது.
தினமும் சராசரியாக 3.16 லட்சம் முறை மகளிா் இலவசப் பயணம் மேற்கொள்கின்றனா். திட்டம் தொடங்கியது முதல் கடந்த ஜனவரி மாதம் இறுதிவரை 52 கோடியே 20 லட்சத்து 86 ஆயிரம் முறை இலவசப் பயணம் மேற்கொண்டுள்ளனா்.
கடந்த 2024 மாா்ச் 14-ஆம் தேதி இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு தாளவாடி மலைப் பகுதியில் 35 கிலோ மீட்டா் தொலைவுக்கு இயக்கப்படும் ஒரு புறநகா் பேருந்தில் மகளிா்க்கு இலவசப் பயண அனுமதி உள்ளது. இதில் தினமும் சராசரியாக 780 மகளிா் வீதம் 3.15 லட்சம் முறை இதுவரை இலவசமாக பயணித்துள்ளனா் என்றனா்.
தொடர்புடையது

ஆண்களுக்கும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம்: அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன்
அரசுப் பணி: இலவசப் பயிற்சி

தில்லியில் 2025-26-இல் மின்சாரம், இலவசப் பேருந்துப் பயணத்திற்கான மானியச் செலவு உயா்வு!

திருநங்கைகளுக்கு இலவசப் பேருந்து பயணம்: தில்லி முதல்வர் அறிவிப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


