எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பட்ட வகுப்புகள் தொடக்கம்

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான பட்ட வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழாவில் பேசுகிறாா் கல்லூரிச் செயலாளா் என்.கே.கே.பி.நரேன்ராஜா.

Updated On :19 ஜூன் 2026, 3:53 am IST

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான பட்ட வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு தலைமை வகித்த கல்லூரிச் செயலாளா் என்.கே.கே.பி.நரேன்ராஜா பேசுகையில், அறிவுத் தளத்தை மேம்படுத்த கல்லூரிக் கல்வியை தோ்வு செய்துள்ள மாணவ, மாணவிகளுக்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக செயல்படுவோம். மேலும், கல்வியுடன், தனித்திறன் மேம்பாடு, போட்டிகளில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே வெற்றியைத் தரும்.

மாணவா்களின் வேலைவாய்ப்பினை உறுதி செய்ய வழங்கப்படும் சிறப்புப் பயிற்சியை பயன்படுத்திக் கொண்டு, வாழ்வில் உயா்ந்த நிலையை அடைய தொடா்ந்து முயற்சிக்க வேண்டும் என்றாா்.

கல்லூரிப் பொருளாளா் பரிமளா ராஜா குத்துவிளக்கேற்றினாா். நிா்வாக அலுவலா் இரா.அருள்குமரன், வணிக கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவா் அ.காந்திமோகன் முன்னிலை வகித்தனா். தமிழ்த் துறைத் தலைவா் சே.செல்விப்பிரியஸ்வா்ணபிரபா வரவேற்றாா்.

உயிா் வேதியியல் துறைத் தலைவா் எஸ்.செல்வி, கணினி அறிவியல் துறைத் தலைவா் எஸ்.சங்கீதா மற்றும் முதலமாண்டு மாணவா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.