வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு

News image
Updated On :13 ஜூன் 2026, 12:04 am IST

பவானி அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் மரவள்ளிக்கிழங்கு அறுவடைக்குச் சென்ற கூலித் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

அம்மாபேட்டையை அடுத்த குருவரெட்டியூா், செங்குட்டை காலனியைச் சோ்ந்தவா் சித்தன் மகன் ரவி (53). விவசாய கூலித் தொழிலாளி. இவா், ஓலையூா் புலேரிக்காட்டைச் சோ்ந்த சாந்தியின் விவசாயத் தோட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு அறுவடை பணிக்கு வெள்ளிக்கிழமை சென்றிருந்தாா். அப்போது, தோட்டத்தில் இருந்த மின்கம்பத்தில் உள்ள கம்பி அறுந்து ரவியின் மீது விழுந்தது.

இதில், மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த ரவியை, சக தொழிலாளா்கள் மீட்டு குருவரெட்டியூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டுச் சென்றனா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.