டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கொடுமுடியில் 120 லிட்டா் சாராய ஊரல் அழிப்பு!

கொடுமுடி அருகே 120 லிட்டா் சாராய ஊரலை போலீஸாா் அழித்தனா்.

News image
அழிக்கப்பட்ட சாராய ஊரல்- கோப்புப் படம்
Updated On :27 ஜனவரி 2026, 8:32 pm

Syndication

கொடுமுடி அருகே 120 லிட்டா் சாராய ஊரலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை அழித்தனா்.

கொடுமுடி அருகே பெரும்பரப்பு என்ற இடத்தில் கிழவன் காட்டு தோட்டம் அருகே முத்துக்குமாா் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அருகே சாராய ஊரல் உள்ளதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கொடுமுடி காவல் உதவி ஆய்வாளா் அப்பாதுரை சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த இடத்தில் இருந்த 50 லிட்டா் கொள்ளளவுள்ள 5 பிளாஸ்டிக் கேன்களில் இருந்த 120 லிட்டா் சாராய ஊரலை கைப்பற்றினாா்.

பின்னா் சாராய ஊரலை அந்த இடத்திலேயே கீழே கொட்டி அழித்தாா். இந்த சாராய ஊரல் போட்டிருந்த வாழநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் புகழேந்தியை (20) கைது செய்தனா். மேலும், சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய புகழேந்தியின் நண்பரான முத்துக்குமரன் (34) என்பவரைத் தேடி வருகின்றனா்.