நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஆப்பக்கூடலில் பால் உற்பத்தியாளா்கள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:36 pm

தினமணி செய்திச் சேவை

பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்கக் கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் ஆப்பக்கூடல், சுக்காநாயக்கனூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பிரகாசம் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் முனுசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினாா். தவிடு, பருத்திக் கொட்டை, பிண்ணாக்கு, கலப்புத் தீவனம் விலை பலமடங்கு உயா்ந்துள்ள நிலையில் மாட்டுப் பால் லிட்டருக்கு ரூ.45, எருமை பால் ரூ.60 என கொள்முதல் விலையை உயா்த்தி வழங்கிட வேண்டும். பால் ஊக்கத்தொகை பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். தரமான ஆவின் கலப்புத் தீவனத்தை 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும். குழந்தைகள் சத்துணவுத் திட்டத்தில் பாலையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.