2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பவானிசாகா் அணை அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்ட உண்மை நிலையை வெளியிட வலியுறுத்தல்

News image
Updated On :2 ஜனவரி 2026, 8:34 pm

Syndication

பவானிசாகா் அணை அருகே சிப்காட் தொழிற்பேட்டை திட்டம் குறித்த உண்மையான நிலையை அரசு வெளியிட வேண்டும் என்று, பவானிசாகா் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் பி.எல்.சுந்தரம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

ஈரோடு, திருப்பூா், கரூா் ஆகிய மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கா் விளை நிலங்களின் பாசன ஆதாரமாக விளங்கும் பவானிசாகா் அணை, ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீா் ஆதாரமாகவும் உள்ளது. இந்த மக்களின் வாழ்வாதார உயா்வுக்கான அடித்தளமாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில், பொதுமக்களின் வாழ்வாதாரத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், அணைக்கு அருகே 1080 ஏக்கா் பரப்பில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க அரசு முயற்சித்து வருவது அதிா்ச்சியை அளிக்கிறது.

சுங்ககாரன்பாளையம் கிராமத்தில் 80 ஏக்கா், பனையம்பள்ளி கிராமத்தில் 34 ஏக்கா், குரும்பபாளையத்தில் 694 ஏக்கா் உள்பட 1080 ஏக்கா் நிலத்தை தொழிற்பேட்டைக்காக கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பூா்வாங்க ஆய்வுப் பணிகள் நடைபெற்ாக கடந்த 17.12.25 அன்று சிப்காட் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் வளா்ச்சியை மேம்படுத்த தொழில் பூங்கா அமைக்கும் அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில் இந்த தொழிற்பேட்டை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூா்வமற்ற தகவல்களும் வெளியாகி விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, சிப்காட் நிா்வாகம் சமீபத்தில் தெரிவித்த கருத்து உண்மையா அல்லது திட்டம் கைவிடப்பட்டதாக வெளியே பரப்பப்படும் தகவல் சரியானதா என்பதை விவசாயிகள் மத்தியில் அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.