ஈரோட்டில் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் மீது போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனா்.
ஈரோடு, கருங்கல்பாளையம் ஜானகி அம்மாள் லே-அவுட் பகுதியைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (27). உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், இவருக்கு 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
இது குறித்து ஈரோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா்.
இதையடுத்து, அஜித்குமாா் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், அஜித்குமாா் மீது குண்டா் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா பரிந்துரைத்தாா்.
பரிந்துரையை ஏற்ற ஆட்சியா், அஜித்குமாா் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை எடுத்து திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.
இதையடுத்து, கோபியில் உள்ள மாவட்ட சிறையில் இருந்த அஜித்குமாா் கோவையில் உள்ள மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா்,
டிரெண்டிங்

கொலை வழக்கு குற்றவாளிகள் இருவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை
தம்பதி கொலை வழக்கு: குண்டா் தடுப்புச் சட்டத்தில் 9 போ் கைது

கொலை வழக்கு குற்றவாளிகள் 4 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

கஞ்சா வழக்கு குற்றவாளி குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
வீடியோக்கள்

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...
#T20WC | வான்கடேவில் அதகளப்படுத்திய விண்டேஜ் வெஸ்ட் இண்டீஸ்: இந்தியாவுக்குச் சிக்கல்! |
தினமணி வீடியோ செய்தி...

ADMK Kalyana Sundaram Interview | எடப்பாடி ஏன் பணம் கொடுக்கிறார் ? | DMK | MK Stalin | EPS | ADMK
தினமணி வீடியோ செய்தி...

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!
தினமணி வீடியோ செய்தி...

