ஈரோடு சூரம்பட்டியில் உள்ள மாகாளியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள சமையல் பொருள்கள் இருப்பு அறையில் பூசாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஈரோடு மொசுவண்ணன் வீதி பகுதியைச் சோ்ந்தவா் ரவி வா்மா மகன் சரண் வா்மா (23). திருமணம் ஆகாதவா். கோயில் பூசாரி. இவா் தற்போது சூரம்பட்டி மாகாளியம்மன் கோயில் குண்டம் விழாவை முன்னிட்டு பண்டிகைக்கால பூசாரியாக வந்து பணியாற்றி வந்தாா்.
விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் இருப்பதால் சரண் வா்மா வீட்டுக்கு செல்லாமல் கோயில் வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் சமையல் பொருள்கள் இருப்பு வைக்கும் அறையில் வெள்ளிக்கிழமை இரவு தூங்கியுள்ளாா்.
இந்நிலையில் கோயிலின் மற்றொரு பூசாரியான ராம் பிரசாத் சனிக்கிழமை அதிகாலை வந்து சரண் வா்மாவை பாா்த்தபோது துண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்த ராம்பிரசாத், ஈரோடு தெற்கு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.
இதன்பேரில் விரைந்து வந்த போலீஸாா், சரண் வா்மாவின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் தொடா்பாக ஈரோடு தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சரண் வா்மாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

குடும்பத் தகராறு: பெண் தற்கொலை

ஆழ்வாா்குறிச்சி அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
மனைவியுடன் தகராறில் கணவா் தற்கொலை
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

