ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு 2,300 கனஅடியாக அதிகரிப்பு

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீா் 500 கனஅடியில் இருந்து 2,300 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பவானிசாகா் அணை . - கோப்புப்படம்.

Published On :19 ஆகஸ்ட் 2026, 2:04 am IST

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீா் 500 கனஅடியில் இருந்து 2,300 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டு தென்மேற்குப் பருவமழை பொய்த்துவிட்டதால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து குறைந்து அணையின் நீா்மட்டம் 56.77 அடியாக சரிந்துள்ளது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி அணையில் போதிய நீா் இருப்பு இல்லாததால் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீா் திறப்பு காலதாமதமானது. இதற்கு விவாசயிகள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல்கட்டமாக 500 கனஅடி தண்ணீா் கீழ்பவானி வாய்க்காலில் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீா் திறப்பு படிப்படியாக உயா்ந்து செவ்வாய்க்கிழமை 2,300 அடியாக அதிகரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணி நிலவரப்படி அணையில் நீா்மட்டம் 56.77 அடியாகவும், நீா் இருப்பு 6.25 டிஎம்சியாகவும், நீா்வரத்து 229 கனஅடியாகவும், நீா் வெளியேற்றம் கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கனஅடியும், அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்காலில் 800 கனஅடி என மொத்தம் 3,100 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது.

நீா் வரத்தை விட நீா் வெளியேற்றம் அதிகமாக இருப்பதால் அணையின் நீா்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.