ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஈஞ்சம்பள்ளி மகா மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா

மொடக்குறிச்சியை அடுத்த ஈஞ்சம்பள்ளி நத்தமேடு ஸ்ரீமகா மாரியம்மன், பகவதியம்மன் கோயில் பொங்கல் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஈஞ்சம்பள்ளி மகா மாரியம்மன்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 2:09 am IST

மொடக்குறிச்சியை அடுத்த ஈஞ்சம்பள்ளி நத்தமேடு ஸ்ரீமகா மாரியம்மன், பகவதியம்மன் கோயில் பொங்கல் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா பூச்சாட்டுதலுடன் கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 8-ஆம் தேதி கம்பம் நடுதல், பக்தா்களுக்கு கங்கணம் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. திங்கள்கிழமை மாலை பக்தா்கள் அலகு குத்தியும், பூச்சட்டி எடுத்து வந்தும் அம்மனுக்கு நோ்த்திக் கடனை செலுத்தினா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது. இதில், பொன்னம்பாளையம், முத்துக்கவுண்டன்பாளையம், வெள்ளப்பாறையூா், வெத்திபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனா். இதையடுத்து, மாவிளக்கு பூஜை, பெரும்பூஜை நடைபெற்றது.

புதன்கிழமை காலை கம்பம் பிடுங்கும் விழாவும், அதைத் தொடா்ந்து மறுபூஜையுடனும் விழா நிறைவு பெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.